தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. 


ஸ்வீட்டான ஹஸ்பண்ட் க்யூட்டான குழந்தைகள் என லைஃப்பில் செட்டில் ஆகிவிட்ட நடிகை சினேகா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் சினேகா. அடிக்கடி புகைப்படங்களை, பதிவிடுவது இவரது வழக்கம்.‌அதேபோல் வித்தியாசமான போட்டோ ஷூட் செய்தும் புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் இன்று நடிகை சினேகா தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






மஞ்சள் நிற சுடிதார் அணிந்து ஒரு பூவை போல காட்சியளிக்கும் நடிகை சினேகா, தனது புகைப்படங்களுடன் ஒரு அழகிய குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "அழகு என்பது முகத்தில் அல்ல;  அழகு என்பது நமது இதயத்தில் உள்ள ஒளியில்தான் உள்ளது!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


சினிமா பல மாறுதல்களை கண்டது  20’s இல் தான். அந்த சமயத்தில் வெஸ்டன் , ஹோம்லி என மாறுப்பட்ட கதைகளில் கச்சிதமாக பொருந்தியவர் நடிகை சினேகா! பப்ளியான முகம் , அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்த சினேகாவை புன்னகை அரசி என கொண்டாடியது கோலிவுட். நதியா, ஜோதிகா போலவே சினேகாவும் தான் நடிக்க வந்த காலக்கட்டத்தில் இளம் பெண்களின் ட்ரெண்ட் செட்டராகவே இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக வட இந்திய நடிகைகள் ஆக்கிரமித்த கோலிவுட்டை சினேகா கச்சிதமாகவே கையாண்டார்.






சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினேகா பிரசன்னா தம்பதிக்கு விகான், ஆத்யாந்தா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்