ஷாலினி பாண்டே

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கும் முதல் தென் இந்திய படமே பெரிய வரவேற்பைக் கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தமிழில் ஜீவா நடித்த கொரில்லா , 100 % காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலமால தென் இந்திய படங்களில் நடிக்காமல் இருந்த ஷாலினி தற்போது தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளார்.

கதவை தட்டாமல் உள்ளே வந்த இயக்குநர்

ஷாலினி பாண்டே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இதில் தான் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்ததாகவும் அப்போது கேரவனில் ஆடை மாற்றும் போது  படத்தின் இயக்குநர் கதவை தட்டாமல் உள்ளே வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு அப்போது 22 வயதுதான் இருந்தும் கோபத்தில் தான் இயக்குநரை வெளியே போகச் சொல்லி கத்தியதாக ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பிரபல இயக்குநர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.