தவெக தலைவர் விஜய்க்கு தென் மாவட்டத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி போட்ட பதிவுக்கு இணையவாசி ஒருவர் ஏடாகூடமாக கமெண்ட் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

விஜய்க்கு கிடைத்த வரவேற்பு

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. நடிகராக தமிழ்நாட்டு மக்களின் பேராதரவை பெற்ற விஜய்க்கு அரசியலிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திரளாக சிறியவர் முதல் பெரியவர் வரை மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக விஜய் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். 

இதில் திருநெல்வேலி மாவட்டம் புறநகர் பகுதியான கேடிசி நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விஜய் பின்னர் அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ சென்றார். செல்லும் வழி எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி சென்ற விஜய் அங்கு ரோடு ஷோ மட்டுமே சென்றார். ஆனால் சித்திரை திருவிழா கூட்டத்தை போல கூடியிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அவர் ஒரு கணம் கண்கலங்கி விட்டார்.

Continues below advertisement

அந்த அளவுக்கு விஜயை காண்பதற்கு பெரும் திரளாக மக்கள் கூடியிருந்தனர். இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. உண்மையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது என இணையவாசிகள்  ஆச்சரியப்பட்டுள்ளனர். 

சனம் பதிவு.. ரசிகரின் கமெண்ட்

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் வலைத்தள பதிவில் விஜய்க்கு கூடிய கூட்டத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இது போன்ற ஒரு கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரசிகர்கள், இணையவாசிகள் என பலரும் கமெண்ட் செய்தனர். அந்த வகையில் ஒருவர் நீங்கள் கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தால் விஜயை விட அதிக கூட்டம் கூடும் என தெரிவித்துள்ளார். இதனை கண்டு கடுப்பான சனம், ‘யோவ்’ என திட்டி பதிவிட்டிருந்தார்.

அதே சமயம் விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்த சனம் செட்டி சமீபத்திய விஜயின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இந்த நிலையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டு நெகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்ட நிலையில், இப்போது மட்டும் நீங்கள் ஏன் சப்போர்ட் செய்கிறீர்கள் என தவெக தரப்பும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.