தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் அழகான தம்பதிகளாக வலம்வந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சமந்தாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நடிகை சமந்தா டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைதளங்களில் எப்போதும் ஆர்வத்துடன் காணப்படுபவர். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.




விவகாரத்திற்கு பிறகு நடிகை சமந்தா தற்போது தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்த நடிகர் நாகசைதன்யாவின் புகைப்படங்கள் மற்றும் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். இருப்பினும், அவருடன் இணைந்து நடித்த ஓ பேபி என்ற படத்தின் போஸ்டரை மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் நீக்காமல் உள்ளார்.


சமந்தா – நாகசைதன்யா தம்பதியினரின் திடீர் விவகாரத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யாவின் புகைப்படத்தையும் நீக்கியிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




முன்னதாக, தெலுங்கு திரையுலகின் நீண்ட பாரம்பரியம் கொண்ட நாகேஸ்வரராவ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் நாகார்ஜூனாவின் மகனாகிய நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு சமந்தா திருமணம் செய்துகொண்டார். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யாவுடன் “ஏமாயா செசவா” படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர், திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பின்பும் நடிகை சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடித்த படமொன்றில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சிகரமாக நடித்த காட்சி நாகசைதன்யாவிற்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இரண்டு பேருக்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், டுவிட்டரில் தனது பெயரின் அருகில் இருந்த நாகசைதன்யாவின் பெயரை அவர் நீக்கியிருந்தார். அப்போது முதல் நடிகர் நாகசைதன்யாவை சமந்தா விவகாரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண