பிரபல நடிகை ரோஜா கின்னஸ் சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். 


90 களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வளர்ந்த இவர், இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்திய ரோஜா,ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தார்.


 






அவருக்கு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் இவர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.


 






என்ன சாதனை என்று கேட்கிறீர்களா.. அது 3000 போட்டோகிராபர்கள் ஒரே தடவையாக அவரை போட்டோ எடுத்து இருக்கின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இதற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




அதன்படி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் புகைப்படக்காரர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வந்தனர். இந்த சாதனைக்காக மண்டபத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி தங்கள் கேமராவை வைத்துக்கொண்டு புகைப்படக்காரர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். 




இந்த நிலையில் அந்த இடத்திற்கு வந்த ரோஜா, மேடையில் ஏறினார். ரோஜா ஓகே என்று சொன்ன உடன், 3000 போட்டோகிராபர்கள் ஒரே கிளிக்காக ரோஜாவை போட்டோ எடுத்தனர். இது வரை யாரும் இப்படியான முயற்சியை செய்ததில்லை என்பதால் அமைச்சர் ரோஜா செய்த இந்த சாதனை   ‘வொண்டர் புக் ஆஃப் ரெக்க்கார்ட்ஸ்’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதனையடுத்து அவருக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.