மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. 2015ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார்லி  படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பார்வதி அந்தப் படத்தில் ஏற்றிருந்த டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.


பூ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த பார்வதிக்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். பூ படத்தில் அவர் ஏற்றிருந்த மாரி கதாபாத்திரமாகட்டும், மரியான் படத்தில் அவர் ஏற்றிருந்த பனிமலர் கதாபாத்திரமாகட்டும் அனைத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பூ, மரியான் படங்கள் மட்டுமின்றி கமலுடன்  உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களிலும்  அவர் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கும், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.


நடிப்பதோடு மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராகவும் குரல்  கொடுப்பவர். குறிப்பாக, பார்வதி மேனன் என அழைக்கப்பட்டபோது இனி தன்னை பார்வதி என்றே அழைக்கலாம் என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி, திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கு அநியாயங்கள் குறித்தும்  அச்சப்படாமல்  தனது கருத்தை கூறுபவர். மேலும், மம்மூட்டி நடிப்பில் வெளியான கசபா படத்தில் மம்மூட்டி பெண்களை இழிவுப்படுத்தும்  வகையில் வசனங்கள் பேசியிருப்பதை தவிர்த்திருக்கலாம் என நேரடியாக கருத்து தெரிவித்தார். 






இந்நிலையில் பார்வதி, நடிகை ப்ரயாகா மார்ட்டின் உள்ளிடோருடன் ஜாலியாக ரோட் ட்ரிப் போகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம்  ரசிக்கப்பட்டுவருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண