Keerthi Suresh | நாயை கொடுமைப்படுத்தினாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சையை கிளப்பும் இன்ஸ்டா போட்டோ!

மொத்தத்தில் ஒரு போட்டோ... தற்போது போட்டோ போட்டி விமர்சனமாக மாறியுள்ளது. 

Continues below advertisement

தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளில் பிஸியாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா ஊரடங்கிற்கு பின் தன் உடல் எடையை பெரும் அளவில் குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார். கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, பெரும்பாலான நடிகைகள் செல்லப்பிராணி வளர்ப்பை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷூம் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 

Continues below advertisement

அவ்வப்போது, அந்த நாயுடன் சேர்ந்து போட்டோ வெளியிடுவதும் அவரது வழக்கம். கீர்த்தியின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பெரும்பாலும் அவரது பெட் இருக்கும். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ள ஒரு போட்டோ, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னுடைய நாயை மிஸ் செய்வதாக கூறி அவர் பதிவிட்டுள்ள போட்டோவில், தனது காலுக்கு அடியில், நாய் நிற்பதும், தனது இரு கால்களால் அதன் கழுத்தை நெரிப்பது போன்ற அணைத்து நிற்பதுமாக அந்த போஃஸ் உள்ளது. 

 

இதை பார்த்த சிலர், ‛என்ன கீர்த்தி இப்படி பண்றீங்க... வாயில்லா ஜீவனை இப்படி போட்டு கொடுமைப்படுத்தலாமா’ என கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, என்ன தான் நாம் வளர்க்கும் நாயாக இருந்தாலும், அதை காலுக்கு அடியில் போட்டு இப்படி கேவலப்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

இதுஒருபுறமிருக்க, ஒரு தரப்பினர், ‛அவங்க செல்லமா வளர்க்கிற நாயை, அவங்க இஷ்டத்திற்கு கொஞ்சுறாங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை’ என ஆதரவு கரமும் நீட்டி வருகிறார். மொத்தத்தில் ஒரு போட்டோ... தற்போது போட்டோ போட்டி விமர்சனமாக மாறியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola