சமூக ஊடகங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க பிரபல நடிகை கயாடு லோஹர் முடிவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது இன்றைக்கு கணிக்க முடியாத அளவுக்கு மாறி விட்டது. ஒரே நாளில் அடிமட்டத்தில் இருப்பவரை உச்சத்துக்கும், உச்சத்தில் இருப்பவரை தரை மட்டத்துக்கும் கொண்டு சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் நம்மை அடிமையாக மாற்றும் சக்தியை கொண்டிருக்கிறது. இதனால் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மன உளைச்சல் மறுபுறம் இருக்கவே செய்கிறது. அதில் திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் விதிவிலக்கல்ல. 

Continues below advertisement

நடிகை கயாடு லோஹர்

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கயாடு லோஹர். கன்னடத்தில் 2021ம் ஆண்டு முகில்பேட் என்ற படம் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2022ல் மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு படம் மூலம் என்ட்ரீ கொடுத்தார். இதன்பின்னர் ஐ பிரேம் யு படம் மூலம் மராத்தி மொழியில் கயாடு லோஹர் அறிமுகமானார். இதனையடுத்து தான் 2025ம் ஆண்டு தமிழில் டிராகன் படம் மூலம் கயாடு லோஹர் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பவளமல்லி என்ற ஆல்பம் பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதற்கிடையில் தமிழில் இதயம் முரளி, இம்மோர்டல், அரசன், மஞ்சனத்தி ஆகிய படங்களில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். 

Also Read: நடிகைகளிடம் அத்துமீறல்.. சிக்கலில் பிரபல இயக்குநர்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

சமூக வலைத்தளத்திலிருந்து விலகல்

இந்த நிலையில் கயாடு லோஹர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக ஊடகங்களிலிருந்து சற்று விலகி இருக்கிறேன். சில நேரங்களில், நம் உடலுக்கு நாம் அளிக்கும் ஓய்வைப் போலவே மனதிற்கும் அத்தகைய ஓய்வு தேவைப்படுகிறது. வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து, சிறிது காலம் இதிலிருந்து விலகி, திரைக்கு அப்பால் உள்ள நிஜ வாழ்க்கையிலும் என்னுடனும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நான் உணர்கிறேன். இங்கு எனக்கு ஆதரவளித்த, ஊக்கமளித்த மற்றும் அன்பைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

உங்கள் செய்திகளும் அன்பும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருக்கமாட்டேன்; ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவை எனது குழுவினரால் இந்த கணக்கின் மூலம் பகிரப்படும். அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு கிடைக்கட்டும். விரைவில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார். அவர் விலகியதற்கான காரணம் சொல்லப்படாவிட்டாலும், கயாடு லோஹரை பற்றிய பல வதந்திகள் சமீபகாலமாக இணையத்தில் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.