மாநாடு படத்தில் நடித்து தமிழில் பிரபலமான நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 


தமிழில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் கல்யாணி பிரியதர்ஷன். சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ஹ்ருதயம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ஜோஷி இயக்கும் ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.




கடந்த மே மாதம் தொடங்கிய இந்த படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஆக்‌ஷன் காட்சிகளில் இடம்பெற்றுள்ளார். இதற்காக சண்டை காட்சிகளில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி, படத்துக்காக சமீபத்தில் ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் அந்த காட்சிகளில் நடித்தார். அப்போது அவருக்கு கையில் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.


நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் - நடிகை லிஸ்ஸி தம்பதியின் மகளாவார். கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹலோ என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். மலையாளத்திலும் பல்வேறு திரைப்படஙகளில் நடித்துள்ள கல்யாணி, தமிழில் மாநாடு படத்தில் நடித்து பெரும்பாலான ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். 


 


Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/s/abpnaduofficial