Just In





Janani Social Media: இனி ஜனனி 'ஐயர்' இல்லை.. வெறும் 'ஜனனி' மட்டும்தான்!
தனது பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயரை நீக்கியுள்ளார் நடிகர் ஜனனி.

’தெகிடி’, இயக்குநர் பாலாவின் ’அவன் இவன்’, ’அதே கண்கள்’, ’பலூன்’ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். தனது பெயர் பின்னால் சாதிப்பெயரைக் குறிப்பிட்டுக்கொண்டதற்கு தீவிரமாக விமர்சிக்கப்பட்டவர். இந்தநிலையில் தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் ஐயர் என்கிற சாதிப்பெயரை இவர் நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாகப் பதிவிட்டிருக்கும் அவர் #BeTheChangeYouWantToSee என்கிற ஹேஷ்டேக்குடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஜனனி தற்போது ’தொல்லைக்காட்சி’, ‘முன்னறிவான்’ உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.
சினிமாத்துறையில் நடிகர்கள் தங்கள் பெயருக்குப் பின்னாலிருக்கும் சாதிப்பெயரை நீக்குவது இது முதன்முறையல்ல. மலையாள நடிகை பார்வதி தனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப்பெயரை நீக்கி பார்வதி திருவொத்து எனத் தன்பெயரை மாற்றிக்கொண்டார்.அது முன்னோடி மாற்றமாக அனைவராலும் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.