தன்னுடைய கணவர் மீதான கோபத்தை எப்படி சரி செய்வேன் என நடிகை தீபா நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தீபா சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் படத்தின் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்த அவருக்கு திருப்புமுனையாக கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’படம் அமைந்தது. தொடர்ந்து டாக்டர் தொடங்கி பல படங்களிலும் தீபா தனது வெள்ளந்தியான காமெடி நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் குக் வித் கோமாளி, Mr & Mrs சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 


இப்படியான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தீபா, தன் கணவருடன் சண்டை ஏற்பட்டால் என்ன செய்து அதனை சரி செய்வேன் என்பது பற்றி வேடிக்கையாக கூறியுள்ளார். அதில், “எனக்கு யாராவது கைதட்டி பாராட்டுன்னா இன்னும் சிறப்பா ஏதாவது பண்ண வேண்டும் என தோன்றும். காலேஜ் படிக்கும்போது நானா எழுதி நடிச்சி பாத்துட்டு இருப்பேன்.ஒருநாள் ரூமுக்குள் ஒரு பொண்ணு எமோஷனலா பேசி நடிச்சா எப்படி இருக்கும்ன்னு முயற்சி பண்ணிட்டு இருந்தேன்.


இதை பார்த்து  என்னோட கூட படிச்சவங்க எல்லோரும்,  நான் தற்கொலை பண்றதுக்காக அழுது ஆர்பாட்டம் பண்றா போல நினைச்சி கதவை தட்டி பெரிய ஆர்பாட்டமே நடந்து போச்சு. மெட்டி ஒலி சீரியலில் நடிக்க ஆட்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு பற்றி என் தோழி சொன்னாள். முயற்சி பண்ணி பார்த்தேன் முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் சிறிய கேரக்டர் தான்.


அதன்பிறகு மேகலா சீரியலில் தான் வாயாடி கேரக்டருக்கு என்னை அழைத்தார்கள்.  மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நான் நன்றாகவே நடித்தேன். ஆனால் அதன்பிறகு சினிமாவிலே, சீரியலிலோ யாருமே கூப்பிடவில்லை. 2 வருடங்கள் கழித்து கார்த்திகை பெண்கள் சீரியலில் திருமுருகன் நடிக்க அழைத்தார். அதனைத் தொடர்ந்து படங்கள், சீரியல் வாய்ப்புகள் அமைந்தது. மேலும் எனக்கும் என் கணவருக்கும் நிறைய சண்டை வரும். ஆனால் மறுநாள் காலையிலேயே சிரிச்சி பேசிட்டு இருப்பேன். அதன்பிறகு நாம சண்டை போட்டோம்ல என நியாபகம் வரும்.


எனக்கு அவர் மீது கோபம் வந்தால் பேப்பரில் என்னலாம் திட்டணுமோ எழுதி எழுதி கிழிச்சி போட்டுடுவேன். வாழ்க்கையின் முடிவு வரை எழுதுவேன். ‘இனிமேல் என் முகத்தில் முழுத்து விடாதீர், உனக்கும் எனக்கும் இருந்த தொடர்பு முறிந்து விட்டது, தீபா என்பவள் உன் வாழ்க்கையில் இருந்தால் கூட நினைத்து விடாதீர்’ என எழுதி விட்டு கணவரிடம் கொடுக்க நினைப்பேன். ஆனால் கடைசியில் கிழித்து விட்டு அனைத்தையும் மறந்து விடுவேன் என அந்த நேர்காணலில் தீபா தெரிவித்துள்ளார்.