பிரபல நடிகை சாவ்வி மிட்டல் தன் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் சாவ்வி பதிலடி தந்து பதிவிட்டுள்ளார்.


பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகையான சாவ்வி மிட்டல் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருப்பவர். பாந்தினி எனும் சீரியலின் மூலமும், பெட்டர் ஹாஃப் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும் பிரபலமான சாவ்வி, தொடர்ந்து தன் புகைப்படங்கள், தன் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.


அந்த வகையில் முன்னதாக சாவ்வி தன் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தமிட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சாவ்வி தன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொள்கிறார், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார் என்றெல்லாம் முன்னதாக கண்டனங்கள் வலுத்தன. மேலும் கமெண்ட் செக்‌ஷனிலேயே சாவ்வி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார் என நெட்டிசன்கள் பதிவிட்டனர்.


அஸீரா, அர்ஹம் என சாவ்விக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், முன்னதாக தன் மீது வைக்கப்பட்ட இத்தகைய விமர்சனங்களுக்கு சாவ்வி பதிலளித்து பதிவிட்டுள்ளார்.


அதில், "ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி நேசிக்கிறாள் என்பதில் சிலருக்கு இப்படியெல்லாம் ஆட்சேபனை இருக்கக்கூடும் என்று என்னால் நினைத்தும்கூட பார்க்க முடியவில்லை.


இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு ஆதரவாக வந்த  எனக்கு வந்த கருத்துகள் மனிதநேயம் மற்றும் அன்புக்கு ஆதரவானவை. என் இரு குழந்தைகளையும் அவர்களின் உதட்டில் முத்தமிடும் சில படங்களைப் பகிர்கிறேன், ஏனென்றால் அவர்கள் மீதான எனது காதலுக்கு எல்லைகளை எவ்வாறு அமைப்பது என்று எனக்குத் தெரியவில்லை.


அன்பைக் காட்டுவதில் வெட்கப்படாமல் இருக்க நான் அவர்களுக்குக் கற்பிக்கிறேன். அவர்கள் அதை திரும்ப அளிக்கிறார்கள். விரும்புபவர்களை காயப்படுத்துவதற்கு மட்டுமே வெட்கப்படுங்கள் என நான் சொல்லிக் கொடுத்துள்ளேன். மேலும் இதுகுறித்து உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்ற கேப்ஷனுடன் தன் குழந்தைகளை உதட்டில் முத்தமிடும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சாவ்விக்கு ஆதராவகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


 






சாவ்வி முன்னதாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் ஆவார்.


முன்னதாக இதேபோல் முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தன் குழந்தை ஆராத்யாவுக்கு உதட்டில் முத்தமிட்டு புகைப்படம் பகிர்ந்ததற்கு மோசமாக விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.