நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. அந்த படத்தில் நடித்தவர் அதாஷர்மா. இவர் தான் நடித்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தனது பாட்டியிடம் காட்டுவதற்கு பயப்பட்டதாக கூறியிருக்கிறார் நடிகை அதா ஷர்மா


தி கேரளா ஸ்டோரி:


கடந்த  மே மாதம் 5 ஆம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்  வெளியான நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்தப் பெண்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதே தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை. இந்தப் படத்தில் பாலியல் வன்புணர்வு  காட்சிகள் இடம்பெற்றிருபதால் இந்தப் படத்தை தனது குடும்பத்திற்கு குறிப்பாக தனது பாட்டியிடம் காட்டுவதற்கு தான் மிகவும் பயப்பட்டதாக கூறியுள்ளார் அதா ஷர்மா.


”எனது குடும்பத்திற்கு  இந்தப் படத்தின் கதை முன்னதாகவே தெரிந்திருந்தது. இருந்தும் படத்தில்  நிறைய நெருடலான காட்சிகள் இருந்ததாலும், பாலியல் வன்புணர்வு காட்சிகள் இவற்றை எல்லாம் பார்த்தப்பின் அவர் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது."


ஆனால் அதா ஷர்மாவின் பாட்டி சொன்ன பதில் என்னத் தெரியுமா..? இந்த படம் மிகவும் அறிவுப்பூர்வமான ஒரு படம் என்று தி கேரளா ஸ்டோரி  திரைப்படத்தைப் பாராட்டியுள்ளர் அந்த பாட்டி. பாட்டியின் இந்த ரியாக்‌ஷனை எதிர்பார்க்காத அதாஷர்மா, “என் பாட்டிக்கு வயது 90 ஆகிறது ஆனால் எனது குடும்பத்தில் மிகவும் உறுதியான பெண் என்று ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். தான் பார்த்ததும் இல்லாமல் தனது மாணவர்களுக்கும் இந்தப் படத்தை காட்டவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்." என்றார் அதாஷர்மா.


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு யு/ஏ சான்றிதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவிகளும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் அவரது பாட்டி. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தற்போது 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அதா ஷர்மா இந்தப் படம் இவ்வளவு பெரிய வசூல்  எடுக்கும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார் அதா.


மேலும் இத்தனைக் கோடி மக்கள தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று தான் நினைத்துகூட பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார். ”இந்தப் படத்தில் வரும் அம்மா மகளுக்கு இடயிலான உறவு  எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தை நான் நடிக்க முடிவு செய்ததற்கும் இது தான் காரணம். இந்த இரு கதாபாத்திரங்கள்  ரசிகர்கள் மத்தியில் நிச்சய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நான் நம்பினேன். ஆனால் இத்தனைக் கோடி மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என கூறினார் அதா ஷர்மா.