Watch Video : எவனோ ஒருத்தன் சொல்லிட்டு போயிட்டான்...ரிலீஸ் பிரச்சனையால் நொந்துபோன விக்ரம் வீடியோ
வீர தீர சூரன் படத்திற்கு மக்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார்

வீர தீர சூரன்
எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் வீர தீர சூரன். எச் ஆர் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் , எஸ் ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது.
பல போராட்டங்களுக்குப் பின் ரிலீஸ்
வீர தீர சூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்வதற்கு முன்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டது. படத்தில் முதலீடு செய்த B4U மீடியா டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து படத்தின் ரிலீஸூக்கு இடைக்கால தடை வாங்கியது. இதனால் காலை மற்றும் மதிய காட்சிகள் தடைபட்டு மாலை முதல் காட்சி தொடங்கியது. படத்திற்கு எல்லா பக்கமிருந்தும் நல்ல விமர்சனங்கள் வரவே அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூலும் அதிகரித்தது. இப்படம் இதுவரை உலகளவி 52 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வீர தீர சூரன் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Just In




நடிகர் விக்ரம் வீடியோ
இந்த வீடியோவில் " ஒரே ஒரு வாழ்க்க. வரலாறா வாழுங்க அப்டினு ஒருத்தன் ஈஸியா சொல்லிட்டு போயிட்டான்.ஆனா இந்த வாழ்க்க இருக்கே அப்பா...ஏதாவது ஒரு பிரச்சன தூக்கி வீசுது நம்மள பாத்து. உதாரணத்திற்கு வீர தீர சூரன் படத்தின் ரிலீஸுக்கு முன் நிறைய பேர் பார்த்து இந்த படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று சொன்னார்கள். படம் ரொம்ப ராவா மாஸா இருக்கு அது இதுனு சொல்லி எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்ப ஏற்படுத்திட்டு போயிட்டாங்க. ஆனால் எல்லாருக்கும் தெரிந்த மாதிரி படத்திற்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் வந்தன. என்னுடைய ரசிகர்களுக்கு ராவான மாஸான ஒரு படம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. இந்த படம் எப்படியாவது ரசிகர்களுக்கு போய் சேர வேண்டும் என்பது தான் எங்கள் எல்லாருடைய ஆசை. அப்படி நாங்கள் கஷ்டப்பட்ட ஒரு படம் வெளிவரவில்லை என்றதும் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு படம் முதல் ஹோ கேன்சல் என்றால் அவ்வளவுதான் அந்த படம் எந்திருக்காது. ஆனால் எங்கள் படத்திற்கு முதல் மற்றும் இரண்டாவது ஷோ கேன்ஸல். அது முதல் நாள் வசூலை ரொம்பவும் பாதித்தது. ஆனால் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்த ஒவ்வொருவரும் முன்பு சொன்னதை விட பல மடங்கு படத்தை பாராட்டி பேசினார். அதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த படம் உங்களுக்காக பண்ண படம் . நாங்கள் நினைத்தது நடந்தது சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துள்ளது என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. " என விக்ரம் தெரிவித்துள்ளார்