தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.


காலையில் நடிகர்கள் ரஜினிகாந்து, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்கு செலுத்திய நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மதியம் 2 மணியளவில் நடிகர் விஜய் சேதுபதி வாக்கு செலுத்தினார்.




இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரிடமே கேளுங்கள் என்றும், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் எனவும் பதில் கூறினார்.