இரண்டாம் ஆண்டில் தவெக


நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியான தமிழ்க வெற்றிக் கழகத்தை அறிவித்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் கட்சி மாநாட்டில் இருந்து தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். 1967, 1977-ஐப் போல ஆட்சியைப் பிடிப்போம்.வரலாறு அமைப்போம் என்று தெரிவித்தார். 


வாசலில் நிறுத்தப்பட்ட தாடி பாலாஜி


விஜய் கட்சித் தொடங்கியது முதல் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜி. சில மாதங்கள் முன்பாக விஜயின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சையும் குத்திக் கொண்டார் தாடி பாலாஜி. இன்று தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை காணச் சென்ற தாடி பாலாஜியை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தார்கள். இந்த நிகழ்வு பரவலான விவாதத்தை உருவாக்கியது. விஜயின் உருவத்தை பச்சை எல்லாம் குத்திக் கொண்டாரே அவரையாவது உள்ளே விட்டிருக்கலாம் என பலர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்கள் 


தாடி பாலாஜியின் பரிசை மறுத்த விஜய்


நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் விஜய் பாலாஜியை சந்தித்தார். அப்போது பாலாஜிக்கு காப்பு ஒன்றை பரிசாக வழங்கினார். ஆனால் விஜய் அதை வாங்க மறுத்துவிட்டதால் பாலாஜி அந்த காப்பை தனது கையில் மாட்டிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆசையாக கொண்டு வந்த பரிசை கூட வாங்காமல் அந்த மனிதரை இப்படி காயப்படுத்தி இருக்கிறார் விஜய் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்