இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது . படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலி மற்றும் இதர இடங்களில் நடக்கிறது. சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் . இதனை அடுத்து சரண்யா பொன்வண்ணன் , தேவதர்ஷினி , சத்யராஜ் , சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் டி .இமான் படத்திற்கு இசையமைக்கிறார் .




இந்நிலையில் , இப்படத்தின் சண்டை கட்சி ஒன்றில் 100க்கு மேற்ப்பட்ட கலைஞர்களை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்த படக்குழு கொரோனா காரணமாக தற்பொழுது அந்த காட்சியின் படப்பிடிப்பை தள்ளி வைத்து உள்ளனர் . தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவி வருவதால் இப்படி ஒரு முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது . படத்தின் மற்ற காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் கொரோனாவின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறது . கொரோனாவின் பரவல் குறைந்த பின்பு இந்த காட்சியை எடுத்துக்கொள்ளலாம் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள் .