விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

விசாரணை கைதி இறந்த வழக்கில் அவரை கொலை செய்ததாக சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசாருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டி கோவிலில் திருவிழாவின் போது செந்தில் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கடந்த 2010 ஏப்ரல் 5ம் தேதி சுரேஷ் குமார் என்பவர் புகார் அளித்தார்.

Continues below advertisement


புகாரின் பேரில் அன்றைய சார்பு ஆய்வாளராக இருந்த திருமலை முத்துச்சாமி மற்றும் ஏட்டுகள் ரவிச்சந்திரன் பொன்ராம் ஆகியோர் குற்றவாளியான செந்தில்குமாரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அங்கு செந்தில்குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் செந்தில்குமார் உயிரிழந்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது அவர்களது உறவினர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சார்பு ஆய்வாளர் திரு முத்துசாமி ஏட்டுகள் ரவிச்சந்திரன் ,பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


  இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் .


அதில் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 6 ஆயிரம் அபராதமும், ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5,000 அபராதம் விதித்து  தீர்ப்பு வழங்கினார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola