மதுரை அருகே இருக்கும் ‘கீழடி அருங்காட்சியகம்’ 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், தமிழர் பெருமை பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 5-ம் தேதி திறந்து வைத்தார். கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது தொடர்பாக சமூக வலைத்தள பதிவை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.





இந்த அருங்காட்சியகத்தில் தினந்தோறும் பார்வையாளர்கள்  பொதுமக்கள் குழந்தைகள்  தினந்தோறும் வருகை புரிந்து வருகின்றனர்.  கீழடியில் 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த  அருங்காட்சியகம் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்டுள்ளது இதில் 6 கட்டிடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நெசவு , விவசாயம், அலங்கார பொருட்கள். வணிகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான பொருட்களுக்கு தனிதனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிட தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்ப வீடியோ காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் மெகா சைஸ் டிவிக்களில் ஒளிபரப்படுகின்றன. 




 

இந்நிலையில் கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை  ஏராளமான திரை பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெளிநாட்டு தூதுவர்களும் வந்து இங்கு பார்த்து செல்கின்றனர் இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முக்கிய நடிகரான முன்னாடி நடிகருமான சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா தந்தை சிவக்குமார் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்கள் சிலர் கீழடி அருங்காட்சியத்தை காலை பார்வையிட்டனர். நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடன் இருந்தார். அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்த ப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் நடிகர் சூர்யாவிற்கு விளக்கி காண்பித்தனர். பார்வையாளர் அனுமதி நேரம் காலை 10 மணி என்பதால் அதற்கு முன்பதாகவே நடிகர் சூர்யா குடும்பத்தினருடன்  அருங்காட்சியத்தை பார்வையிட்டு சென்றார்.