விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தது குறித்து நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 


இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியானதாலும், படத்தின் அறிவிப்பு தொடங்கி பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் என அனைத்தும் மிக பிரமாண்டமாக நடந்ததால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. சமூக வலைத்தளங்கள் முழுக்க விக்ரம்..விக்ரம்.. என்ற அளவுக்கு இந்த படத்தின் பேச்சுதான் உள்ளது. படமும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதாக படம் பார்த்த பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 






இதனிடையே நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பான கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது?.. உங்களுடன் திரையில் நடிக்கும் கனவு நனவானது. அதனை செய்ததற்கு நன்றி..இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அன்பை கண்டு வியக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 


படத்தில் சிறிது நேரமே வந்தாலும் சூர்யா தரமான நடிப்பை வழங்கியுள்ளதாகவும், இதுபோன்ற பவர்ஃபுல்லான கதைகளையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண