Sivakarthikeyan: “வாய்ப்பு வராதே?” - வெற்றிமாறன் படத்தில் நடிக்க யோசித்த சூரி.. உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!

நான் சேனலில் இருக்கும்போது எல்லாரையும் அண்ணன் தான் சொல்வேன். ஆனால் சூரியை ஆத்மார்த்தமாக அண்ணன் என சொல்வேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சூரி எனக்கு உண்மையிலேயே அண்ணன் தான் என கருடன் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கருடன்”. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 31 ஆம் தேதி  தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருப்பது தெரிகிறது. இயக்குநர் துரை செந்தில் குமார் என்னுடைய எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை படத்தின் இயக்குநர். திட்ட வேண்டும் என்றால் கூட சிரிச்சிக்கிட்டே தான் பேசுவார். அருமையான களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. 

அவர் என்னிடம் எப்போது கதை சொல்ல வந்தாலும் நானும் பதிலுக்கு ஒரு கதை சொல்வேன். அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். சூரி எனக்கு உண்மையிலேயே அண்ணன் தான். நான் சேனலில் இருக்கும்போது எல்லாரையும் அண்ணன் தான் சொல்வேன். ஆனால் சூரியை ஆத்மார்த்தமாக அண்ணன் என சொல்வேன். அவர் கதையின் நாயகனாக  நீங்க நடிக்கலாம் என சொல்லி முதன்முதலில் கதை சொன்னது நான் தான். இப்ப பெரிய, பெரிய இயக்குநர்கள் கூட வேலை செய்து வருகிறார். ஆனால் நான் சொன்னது நியாபகம் இருக்கா என தெரியவில்லை. 

ஆனால் அவர் அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என சொல்வார். அப்படியிருக்கையில் ஒருநாள் என்னிடம் வந்து தம்பி உங்களிடம் ஒன்னு சொல்ல வேண்டும். நேரில் சந்தித்ததும், “வெற்றிமாறன் என்னை வைத்து படம் பண்ண முடிவு செய்துள்ளார்” என சொன்னார். நான், “சூப்பர் அண்ணே.. அவர் என்ன சொல்றாரோ அதை அப்படியே பண்ணிடுங்க” என பதிலளித்தேன். 

இதைக் கேட்டதும், “நான் வெற்றிமாறன் கூட படம் பண்ணிருவேன் தம்பி. ஆனால் அடுத்ததாக யாரும் கூப்பிடாமல் விட்டால் என்ன செய்வேன்?” என சூரி கேட்டார். காமெடி பண்ற யாரையும் குறைவாக எண்ணி விட வேண்டாம். அவர்களால் சீரியஸான கேரக்டர்களும் பண்ண முடியும். நாங்கள் “கொட்டுக்காளி” படத்தில் இணைந்திருக்கிறோன். விடுதலை படத்தை விட ஒருபடி மேலே அந்த படம் சூரிக்கு அமையும். அவர் ரொம்ப தெளிவாக இருக்கிறார். கொட்டுக்காளி படம் விரைவில் வெளியாகும். 

சூரி அண்ணனுக்கு சப்போர்ட் செய்ய சசிகுமார் இப்படத்தில் இணைந்துள்ளார். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் சூரி அண்ணன் மாதிரி ஒரு படத்தில் உங்களுடன் இணைந்து நடிப்பேன்” என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola