சைஃப் அலி கான் - கரீனா கபூர்


புகழ்பெற்ற பாலிவுட் காதல் ஜோடிகளாக இருந்து திருமண தம்பதிகளாக மாறியவர்கள் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர். நடிகர் சைஃப் அலிகான் தனது முதல் மனைவியான அம்ரிதா சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 13 ஆண்டுகால தனது முதல் திருமண வாழ்க்கையை முடித்த சைஃப் அலிகான் பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் மீண்டும் காதலில் விழுந்தார். 2007-ஆம் முதல் டேட் செய்து வந்த இந்த ஜோடி கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.


இந்த தம்பதியினருக்கு தைமூர் அலிகான் மற்றும் ஜே அலிகான் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 


கரீனாவின் பெயரை கையில் பச்சை குத்திய சைஃப் அலிகான்






கரீனா கபூரை காதலிக்க தொடங்கிய காலத்தில் அவரது பெயரை தனது இடது கையில் பச்சை குத்தினார் நடிகர் சைஃப் அலிகான் . கடந்த 16 வருடங்களாக சைஃப் அலிகானின் கையில் கரீனாவின் பெயர் இருந்து வருகிறது . சமீபத்தில் மும்பையில் சைஃப் அலிகான் புகைப்படம் ஒன்றில் இந்த டாட்டூவிற்கு பதிலாக வேறு ஒரு டாட்டூ அவரது கையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 


சைஃப் அலிகான் கரீனாவின் பெயரை தனது கையில் இருந்து எடுத்ததற்கான பல காரணங்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். இன்னொரு பக்கம் சைஃப் அலிகான் தற்போது நடித்து வரும் படம் ஒன்றுக்காக இந்த டாட்டூவை தற்காலிகமாக போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமீப காலங்களில் பிரபலங்கள் திருமண உறவை முடித்து விவாகரத்து பெறும் செய்திகள் வருவது அதிகரித்துள்ள நிலையில் பிரபலங்களின் சின்ன சின்ன அசைவுகள் கூர்மையாக கவனித்து வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோன் உடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து இருவரது தரப்பில் இருந்தும் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் ரசிகர்களிடம் குழப்பம் நிலைத்து வருகிறது. இப்படியான சூழலில் சைஃப் அலி கானின் இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது