பிரபல தமிழ் திரைப்பட நடிகரான நரேன் 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அப்பாவாகியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தன் சினிமா வாழ்க்கையை  'நிழல் குத்து' என்ற மலையாள படத்தில் துவங்கிய நரேன், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். பின் 2006 ஆம் ஆண்டில், மிஸ்கினின்  'சித்திரம் பேசுதடி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைதொடர்ந்து, நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிகோட்டை, கோ, முகமூடி, யூடர்ன் ஆகிய படங்களில் நடித்தார்.


இடையில் காணாமல் போன இவர் 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் “கைதி” படத்தில் சூப்பராக ரீ- என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் வந்த விக்ரம் படத்திலும் கைதியில் நடித்த அதே கதாப்பாத்திரத்தில் நடித்து, லோகியின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒரு அங்கமானார்.






நரேன் கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மகள் இருக்கும் நிலையில், தற்போது நரேன் மீண்டும் அப்பாவாகியுள்ளார். அவரது இன்ஸ்டா பக்கத்தில், நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


முன்னதாக  நரேன், அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தியை அவர்களின் 15 ஆவது திருமண நாளான கடந்த ஆகஸ்ட் மாதம் அன்று வெளியிட்டார். 14 ஆண்டுகளுக்கு பின்னர் நரேன் - மஞ்சு இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


எல் சி யுவில் தளபதி 67ஆவது படம்!


பொங்கலன்று வெளியாகும்  ‘வாரிசு’ திரைப்படத்தையடுத்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.  விக்ரம் படத்தில் வேலை மற்றும் குடும்பத்தை இழந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தவர் நரேன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அவர், விஜய்யின்  67ஆவது படம லோகேஷ் சினிமாடிக் யூனிவர்சில் இடம் பெற்றுள்ளதாக கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் தான் இடம் பெறவில்லை எனவும், கைதி-2 படத்தில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாகவும் நரேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : பட்டத்து அரசன்; அதர்வா ஆடியது கபடியா.. இல்ல..? - திரை விமர்சனம்!