Just In





எழுதி குடுத்தா என்ன வேண்டாலும் கேப்பியா.....மோகன்லாலை கேள்வி கேட்டு கடுப்பாக்கிய இர்ஃபான்
Irfan Mohanlal Interview : ரசிகர்களின் கோபத்தை கிள்ப்பும்படி மோகன்லாலிடம் அர்த்தமற்ற கேள்விகளை கேட்டுள்ளார் பிரபல யூடியூபர் இர்ஃபான்

மோகன்லால் நடித்துள்ள எம்புரான்
மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் மோகன்லால். தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் , ஜில்லா , உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் வழி இவருக்கும் பெரியளவில் தமிழ் ரசிகர்களூம் இருந்து வருகிறார்கள். தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிஃபர் 2 எம்புரான் படத்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இர்ஃபான் மோகன்லால் நேர்காணல்
எம்புரான் படத்திற்காக மோகன்லால் தமிழ்நாடு , ஆந்திரா என இரு மாநிலங்களிலும் தீவிரமாக ப்ரோமோட் செய்து வருகிறார். தமிழில் பல யூடியூப் சேனல்களுக்கு மோகன்லால் பேட்டியளித்துள்ளார். அந்த வகையில் பிரபல யூடியூபர் இர்ஃபான் மோகன்லாலை எடுத்து பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது
ஏற்கனவே பல கார் விபத்து உட்பட பல சர்ச்சைகளில் சிக்கியவர் இர்ஃபான். சமீபத்தில் பிருத்விராஜ் மற்றும் மோகன்லாலை நேர்காணல் செய்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவில் மோகன்லாலிடம் சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டு ரசிகர்களை கடுப்படித்துள்ளார் இர்ஃபான். குறிப்பாக மோகன்லாலிடம் த்ரிஷ்யம் படத்தில் வருவது போல் நிஜ வாழ்க்கையில் ஏதாவது செய்திருக்கிறீர்களா என இர்ஃபான் கேட்ட கேள்வி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த கேள்விக்கு நடிகர் பிருத்விராஜ் ஆமாம் நிறைய பேரை தனது வீட்டில் கொலை செய்து புதைத்து வைத்திருக்கிறார் என நக்கலாக பதிலளித்துள்ளார்.
இர்ஃபான் இந்த கேள்வியை தனது டீம் மேட்ஸ் எழுதி கொடுத்ததாக வீடியோவில் தெரிவித்துள்ளார். எழுதி கொடுத்தால் என்ன வேண்டுமானால் கேட்பியா என ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்
மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் சரியாக ஓடாத நிலையில் எம்புரான் திரைப்படம் மலையாள சினிமாவில் வசூல் ரீதியாக புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.