தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்கள் அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை ஆகச்சிறந்த கதாநாயகிகளை கொண்டாடி வருகின்றனர். அதிலும் தமிழ்நாடு கதாநாயகிகளை விட  வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள்.


அதுபோல் 1980க்குப் பிறகு கொண்டாடப்பட்ட நடிகை தான் குஷ்பூ. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்த குஷ்பூ.  தொடர்ந்து அவர் நடித்து வந்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அவர் அழகான முகத்தோற்றமும், கொழு கொழு  கன்னமும் ரசிகர்கள் மத்தியில் ஆழப் பதிந்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் பரவ ஆரம்பித்தது. 


இப்படி கவரப்பட்ட குஷ்புவுக்கு ரசிகர்கள் அப்போதே கோயிலும் கட்டினர். மல்லிகை பூ போல் இட்லி இருக்க வேண்டும் என்ற பேச்சு மாறி, குஷ்பூ இட்லி என்று பரவலாகப் பேசப்பட்டது, இன்றளவும் பேசப்பட்டு தான் வருகிறது. 


அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் கமலஹாசன் என அனைத்து நடிகர்களுடன் இவர் நடித்து உள்ளார். மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்சினிமாவில் இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இருக்க முடியாது. இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நிற்க வைப்பதில் வல்லவர்.






சினிமாவை விட்டு விலகிய பல நடிகைகள் இங்கு உண்டு, அதனால்தான் என்னவோ தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டார்


தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது. பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த இவர். பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாது அரசியலில் கால் பதித்த இவர், சினிமா போலவே பல கட்சிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு எப்போதும் தவிர்க்க முடியாத தனி இடம் உண்டு.


தற்போது அவர் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அதேபோல் தனது உடல் எடையை குறைத்து சமூகவலைதளங்களில் அந்த புகைப்படங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் உண்மையில் இது அவர் தானா என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.


இந்நிலையில், நடிகை குஷ்பூ தான் 18 வயதில் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் தற்போது தனக்கு அளவு சரியாக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது அவருக்கு கடுமையான உழைப்பாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாகவே உள்ளது.


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?