நடிகர் ஜோதிகாவும் நடிகர் கார்த்தியும் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் 2019ல் வெளியானது. த்ரில்லர் திரைக்கதைகளுக்குப் பெயர் போன ஜித்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் நடிகர் சத்யராஜ், இளவரசு, சீதா ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தின் ப்ரிவியூ காட்சி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி தனது அண்ணியும் நடிகருமான ஜோதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்திருந்தார். 






அதில், ‘அண்ணியுடன் நடிப்பது புது அனுபவமா இருந்துச்சு. படத்துக்கு ஆறு மாசம் முன்னயே தன்னைத் தயார்படுத்திக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு மாசம் முன்னமே அவங்களுக்கு வசனம் எல்லாம் கைக்கு வந்துடுச்சு. தினமும் தன்னுடைய கதாப்பாத்திரத்துக்காக ஹோம்வொர்க் செஞ்சாங்க. சினமாவைப் பொறுத்தவரை நான் அவங்களுக்கு அடுத்த ஜெனரேஷன்னுதான் சொல்லனும். நிறைய கத்துக்கிட்டேன். ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் அதோட மாண்டேஜ் பார்ப்பாங்க. எக்ஸ்ப்ரெஷன் சரியா இருக்கா, ஷாட் நல்லா வந்து இருக்கானு பார்த்துப்பாங்க. 






‘இவங்க இல்லாம சத்யராஜ் மாமா கூட நடிச்சது எனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம். அவர் இல்லாம படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டேன். மனுஷன் இன்னைக்கும் தன்னை அப்படியே எப்படி கூலா வைச்சிருக்காருனு அவரப் பார்த்துதான் கத்துக்கனும். அவர் கூட சின்னபிள்ளையா வண்டியில போன நான் இன்னைக்கு அவர் கூட ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஷேர் பண்றது என்னோட லக்’ எனப் பகிர்ந்துகொண்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் தற்போது ஷூட்டிங் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.