ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 2022 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மார்ச் 20-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி இன்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


ஜம்ஷத்பூர் அணிக்கு எதிராக கேரள அணி இன்று களமிறங்கியது. முதல் அரை இறுதிப்போட்டியான இந்த போட்டியில் 1-1 என போட்டி டிராவானது. அதனை அடுத்து, அக்ரிகேட் முறைப்படி 2-1 என்ற கணக்கில் கேரள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.










இரண்டு அரை இறுதிப்போட்டிகள் கொண்ட தொடரில், நாளை இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இதில், ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணி மோத உள்ளது. நாளை நடைபெறும் அரை இறுதிப்போட்டியை அடுத்து மார்ச் 20-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 11அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சென்னையின் எஃப்.சி அணி எட்டாவது இடத்தில் நிறைவு செய்துள்ளது.








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண