தமிழ், மலையாளம் இரண்டிலும் காமெடி கலந்து நடிப்பில் கலக்குபவர் என்றால் நடிகைகளில் ஊர்வசி, நடிகர்களில் ஜெயராம்.


இரண்டு மொழிகளில் கலக்கிய நடிகர் 


மலையாள சினிமாவில் 80களில் தன் சினிமா பயணத்தைத் தொடங்கி 90களின் மத்திய முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் ஜெயராம்.


இவர் அப்படியே தமிழ் சினிமாவில் கோகுலம், பிரியங்கா, முறை மாமன் என தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமலின் ஆதர்ச நடிகர்களுள் ஒருவராக விளங்கும் ஜெயராம், தெனாலி, பஞ்ச தந்திரம், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.




இறுதியாக துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய்யின் உயர் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஜெயராம் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி பல குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.


ஆழ்வார்க்கடியான்


இந்நிலையில், மணிரத்னத்தின் பிரம்மாண்டப் படமான பொன்னியன் செல்வனில் ’ஆழ்வார்க்கடியான் நம்பி’ என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயராம் அது குறித்து மனம் திறந்துள்ளார்.


”எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதேபோல்தான் எனக்கும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது.


பொன்னியின் செல்வன் போல் ஒரு வரலாறு சார்ந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். என் வாழ்நாள் கனவு நிறைவேறியது போல் எனக்கு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.


 






வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நேற்று வெளியானது முதல் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.




மேலும் படிக்க: Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி!


Bigg Boss 6 Tamil Contestants: விரைவில் பிக்பாஸ் 6! ரெடியாகுது போட்டியாளர்கள் லிஸ்ட்! வெளியான பெயர்கள் இதோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண