நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு வரும் ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் நடப்பாண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியானது. இரு படங்களிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்த அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன், ஜெயம் ரவி 30 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


இதில் இறைவன் படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கிய அஹமத் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா  இப்படத்திற்கு  இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததுடன் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. 






தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி - நயன்தாரா கூட்டணி இணைந்ததால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.