நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் சமையலிலும் கில்லாடி என்பதை நிரூபிக்க களமிறங்கியுள்ளார். 1982-ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா , அடுத்தடுத்து பல படங்களில் இயக்குநராக களம் கண்டவர். இதுவரையில் 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இது தவிர 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அந்த ரிசப்ஷன்ல 600 ரூபாய் பணம் கொடுத்திருந்தாங்க. அநாதையா நின்னேன் அன்னைக்கு. இப்போ கூட அதை நினைத்தால் கண்ணு கலங்குது. அதன் பிறகு அங்கிருந்து அப்படியே பழனிக்கு போயிட்டு, ”முருகா உன்னை பார்க்க மேல வரமேட்டேன்” என கோவமாக தேங்காய் உடைத்துவிட்டு வந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பெரிய இயக்குநர் ஆனேன்.
அதே தயாரிப்பாளர் என்னை, இயக்குநரே என ஒருமுறை அழைத்தார். நான் சுற்றி முற்றி திரும்பி பார்த்துவிட்டு, ”யாரண்ணே சொல்லுறீங்க..எனக்குதான் இயக்கம் தெரியாதுனு சொன்னீங்களே..எதுக்கு என்னை கூப்பிடுறீங்கன்னு” கேட்டேன். இதெல்லாமே நடக்கும். ஒரு கதவு அடைத்தால் மற்றொரு கதவு திறக்கும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்” என தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மனோபாலா.