Anupama | ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினாரா அனுபமா ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

புகைப்படத்தில் கண்ணாடி அணிந்து , ஒரு ஆசிரியை போலவே உள்ளார் அனுபமா. இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் சம்மந்தப்பட்ட நபர்.

Continues below advertisement

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். “அது எந்தா எனக்கு மாத்ரம் ஹார்ட் ஷேப்” என ஒரு கட்லட் வசனம் மூலம் தமிழ் இளைஞர்கள் இதயங்களில் குடியேறியவர் அனுபமா. தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.தற்போது “தள்ளிப்போகாதே” என்ற திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  தமிழ், மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் அனுபமா. சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வபோது தனது கெட்டப்புகளை மாற்றியமைத்து ஃபோட்டோ ஷூட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தள பக்கங்களில் பதிவிடுவார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு பயங்கர தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

பீகார் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு(STET)  முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. சில தொழில்நுட்ப பிரச்சனையின் விளைவாக சமஸ்கிருதம், உருது மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் மட்டும் வெளியிட முடியாமல் இருந்தன. விடுப்பட்டிருந்த அந்த   மூன்று பாடங்களின் மதிப்பெண்களை அரசு இணையத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய ரிஷிகேஷ் குமார் என்பவர் தனது தேர்வு முடிவுகள் குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வமாக  இணையதளத்தை நாடியுள்ளார். சென்றவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி , தேர்வு முடிவு பக்கத்தில் ரிஷிகேஷ் குமார் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இருந்திருக்கிறது. புகைப்படத்தில் கண்ணாடி அணிந்து , ஒரு ஆசிரியை போலவே உள்ளார் அனுபமா. இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் சம்மந்தப்பட்ட நபர். இது வைரலாக பரவி வருகிறது. 


மேலும் நெட்டிசன்கள் பீகாரில் டீச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என கிண்டலடித்து வருகின்றனர். முன்னதாக அனுபமா தனது வலைத்தள பக்கத்தில்  க்ளாமரான புகைப்படம் ஒன்ரை பகிர்ந்து , “என்னை நான் மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எப்படி “ என ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு கீழே கமண்ட் செய்த பலரும், அதனால்தான் ஆசிரியர் பணியை தேர்வு செய்தீர்களா என இந்த சம்பவம் தொடர்பாகவே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் இது குறித்து பகிரவே சம்பவம் காட்டுத்தீ போல பரவ ஆரமித்திருக்கிறது.இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியல் வெளியானது. அதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola