கொரோனா சூழலால் அஜித்தின்  ‘வலிமை’ திரைப்படம் கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களுக்கு பிறகு வெளியாகியது. படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக படத்தை நினைத்த மாதிரி எடுக்க முடியவில்லை என வினோத் கூறியிருந்தார். அது படத்திலும் வெளிப்பட படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கெல்லாம் மேல் அஜித்தை சிலர் தனிமனித தாக்குதலுக்கும் உள்ளாக்கினர்.


இதனால் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் ஹெச்.வினோத்திற்கே கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார் அஜித். இதற்கிடையேதான் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்தத்தகவல் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தால் நாளை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படும் என்றும் சொல்லபபடுகிறது.








இந்த அறிவிப்பு நாளை வெளியாகும் என சொல்லப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் கேள்வி ஒன்று அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் அஜித்தின் படம் தொடர்பான அறிவிப்புகள் பொதுவாக வியாழக்கிழமைதான் வெளியாகும். அப்படி இருக்கையில் இந்தப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறதே என்ற கேள்விதான்.




சிறுத்தை சிவா தீவிரமான சாய்பாபா பக்தர். அவருடன் அஜித் முதன்முறையாக ‘வீரம்’ படத்தில் இணைந்தார். அஜித்திற்கு சாய் பாபா மீது பற்று உண்டு. அதன் பிரதிபலிப்புதான் வீரம் மேக்கிங் காட்சியில் படக்குழு அனைவரும் சாய்பாபா படத்தை வணங்கும் காட்சி. அதனைத்தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்தார். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தீவிர சாய்பாபா பக்தர். வியாழக்கிழமை சாய் பாபாவுக்கு உகந்த நாளாக பார்க்கப்படும் நிலையில் இந்தப்படம் வியாழக்கிழமை வெளியானது.


அதனைத் தொடர்ந்து சிவா அஜித் இணைந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்த ஏ.எம். ரத்னமும் தீவிரமான சாய் பாபா பக்தர் மூவரும் சாய் பாபா பக்தர்கள் என்பதால் படம் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாது படமும் வியாழக்கிழமை வெளியானது. அதனைத்தொடர்ந்து வந்த விசுவாசம் படம் வியாழகிழமையே வெளியானது.




அந்த வரிசையில் அண்மையில் வெளியான வலிமை தொடர்பான பெரும்பாலான அறிவிப்புகளும், வலிமை படமும் வியாழன் அன்றே வெளியானது. இந்த நிலையில் அஜித் விக்னேஷ் சிவன் இணையும் புதிய தொடர்பான தகவல் வெள்ளி கிழமை வெளியாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இத்தோடு முடிவுக்கு வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.