நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இடையே நீண்ட நாள் காதல் இருந்தது அனைவரும் அறிந்ததே. காதல், பின்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறியது. கடந்த மே 18 ம் தேதி, இருவருக்கும் திருமணம் ஆக நிலையில் திரையுலகின் பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.


அதுமட்டுமின்றி, பலரும் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர். திருமணத்திற்குப் பின்இருவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இன்பச்சுற்றுலா சென்று வந்த நிலையில், தற்போது அவர்களது பயணம் நாடு தாண்டி, வெளிநாட்டிற்குச் சென்றுள்ளது. 


 






சமீபமாகவே வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ள நடிகர்-நடிகைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அநேகமாகி இது அவர்களுக்கு டூர் சீசன் போலும். அந்த வரிசையில் ஏற்கனவே மற்றொரு புதுமணத் தம்பதிகளான நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி தங்கள் பயணத்தை ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து வரும் நிலையில் , மற்றொரு புதுமணத் தம்பதியான ஆதி-நிக்கி ஜோடியும் பிரன்சு நாட்டின் பாரிஸ் ஈஃபிள் டவரில் தங்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகிறது. 






இருவரும் திருமணமாகி 100 வது நாள் ஆன நிலையில், அதை பாரிஸ் அருகே கொண்டாடி மகிழ்ந்த தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆதி. தன் காதல் மனைவியை கட்டி அனைத்தவாறு அமர்ந்திருந்த ஆதி, தங்களின் 100வது நாள் இதுவென்றும், இன்னும் 25 ஆயிரத்து 550 நாள் இது போகும் என்றும் , அவர்கள் கூறியுள்ளனர். நிக்கி கல்ராணி ஒரு படி மேலே போய், ‛இந்த சூப்பர் பைத்தியகாரத்தனமான சாகச வாழ்க்கை தொடரட்டும்’ என்று அதே பதிவில் கமெண்ட் செய்துள்ளார். 


கும்மிருட்டில், ஒளியில் மிளிரும் பாரிஸ் டவரின் பின்னணியில் பரஸ்பரம் காதல் மொழி பேசி அமர்ந்திருந்த ஆதி-நிக்கி ஜோடியை பார்க்கும் போது, உண்மையில் பரவசமாகவே இருந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண