கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த "கிப்டி" என்ற இளம் பெண் மண்டை உடைக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில்,  “நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரி தோழிகள் 2 பேர் ஆகியோருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த எனது பள்ளி தோழன் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அஜின் வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு தன்னையும் மண்டையில் கட்டையால் அடித்து மண்டையை உடைத்து தப்பியோடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீசார் தாக்குதல் நடத்தி தப்பியோடிய அஜினை தேடி வரும் நிலையில், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது, சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகளை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் "கிப்டி" குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

 

போலீஸ் தொடர்ந்து விசாரணை நடந்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த பங்களா வீட்டில் கல்லூரி மாணவிகள், தங்களது ஆண் நண்பர்களை வரவழைத்து மது அருந்தி பின்னர் தனக்கு விருப்பமானவர்களுடன் மாறி, மாறி உல்லாசமாக இருப்பார்கள். ஜாயின்ட் சரக்கு பார்ட்டி என்ற பெயரில் இவர்கள் ஒன்று கூடுவார்கள் என்று கல்லூரி மாணவி ஒருவர் பேசியதாக ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது. இந்த உரையாடலுடன், அந்த பங்களா வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என்பதற்கான வீடியோவும் வெளிவந்தது.

அந்த வீடியோவில் அந்த வீட்டில் ஆணுறைகள், மது பாட்டில்கள், சிகரெட்டுகள், போதை பொருட்கள் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி தாக்குதல் நடந்த அன்று பங்களா வீட்டில் இருந்த மாணவர்கள், மாணவிகள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் சென்று விசாரணை நடந்தது.


தற்போது மாணவியை தாக்கிய மாஜி காதலன் தலைமறைவாக உள்ளார். சம்பவத்தன்று நடந்த லீலைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்ததாகவும், அதில் மாணவி கள் மற்றும் அவர்களின் ஆண் நண்பர்கள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் எங்கு உள்ளது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் முன்னாள் காதலன் பிடிபட்டால் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.


இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் படி, சிபிசிஐடி போலீசாரும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார். பங்களா வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான மாணவி, போதகரான அவரது தந்தையிடம் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர்.


சுமார் 2 மணி நேரம் விசாரணை : 


சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை நடத்தியதில் அந்தபெண், ”சமூக வலை தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை ஆகும். கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பார்ட்டியை திசை திருப்புகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். அப்போது சில வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸ் தரப்பில் காட்டியதாகவும், அதற்கு அந்த பெண் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.