ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்து வெளிவர இருக்கும் திரைப்படம்  ராதே ஷ்யாம் . இந்த திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது . முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி  ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாவே இருந்து வருகிறது. ராதே ஷியாம் திரைப்படத்தின்  ரீலீஸ் தேதி கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியில் கடந்த 11ஆம் தேதி ராதே ஷியாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. 


 


இந்நிலையில் அந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் போதிய ஆதரவை பெற்று இருந்தாலும் எதிர்ப்பார்த்தப்படி திரையரங்குகளில் ஓடவில்லை என்று கூறப்பட்டது. இதன்காரணமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்தச் சூழலில் படத்தின் கதாநாயகன் பிரபாஸ் இந்தப் படத்திற்காக வாங்கிய 50 கோடி ரூபாயை தொகை திருப்பி தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் தெலுங்கு திரையுலகில் கசிந்துள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 






அதன்படி கசிந்த தகவல்களின்படி படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியான தகவல்களின்படி, இந்தத் திரைப்படத்தின் தோல்வியை ஈடுகட்டுவதற்காக படத்தின் கதாநாயகன் நடிகர் பிரபாஸ் தன்னுடைய சம்பளத் தொகையான 100 கோடி ரூபாய் பணத்தில் இருந்து 50 கோடி ரூபாய் பணத்தை திரும்பக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் பிரபாஸ் இவ்வாறு செய்தது அவரது ரசிகர்களையும், பல்வேறு பிரபலங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண