பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகையும் பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி நடிகையும், பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான, ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய நிர்வாகியுமான சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி, தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி, விளம்பரம் தேடி வரும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

Continues below advertisement

இதனிடையே சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு உடன்படாத ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதிக்குள் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து  அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி சினேகன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.