‘96’ ‘பிகில்’ படங்களில் நடித்த நடிகை வர்ஷா தனது கண்களை தானம் செய்துள்ளார். 


இது குறித்து அவர் கூறும் போது, “ நாம் இறந்த பிறகும் இந்த உலகை பார்க்க வேண்டுமென்றால், அதற்கு கண் தானம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல இருளிலேயே இருப்பவர்களின் வாழ்க்கையில் நாம் கொடுக்கும் கண்தான் ஒளி விளக்கை ஏற்றும்.” என்று கூறியுள்ளார். கண் தானம் செய்த வர்ஷாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 






தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழில் ‘சதுரன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து  ‘யானும் தீயவன்’,  ‘சீமதுரை’, ‘வெற்றிவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனையடுத்துதான் வர்ஷாவுக்கு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான  ‘96’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


 






இதன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் திருமண ஆன பெண்ணாக நடித்தார். அதில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. அதனைத்தொடர்ந்து விஜயின்  ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்தார். அண்மையில் ஜிவி பிரகாஷ்குமாருடன் இவர் இணைந்து நடித்த செல்ஃபி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.