பலரது வாட்சப் எண்ணிற்கு, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்தது. 


வாட்சப் மெசேஜ்:


'விக்சித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் பலருக்கும் வாட்சப் வழியாக மெசேஜ் வந்தது. இந்த செய்தியானது, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 


அந்த வாட்ஸ்அப் செய்தியில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து குடிமக்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.





அதனுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதாக தெரிவித்தது.






இது குறித்து காங்கிரஸ் தெரிவிக்கையில்,  ”வாட்சப் செய்தியில் தெரிவித்திருப்பதாவது கருத்து கேட்பது என்று, ஆனால் இருப்பதோ தேர்தல் பரப்புரை.  வாட்சப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறுகிறது. ஆனால் எப்படி தேர்தல் தொடர்பான பரபரப்புரைகளை வாட்சப் எப்படி அனுமதிக்கிறது”  எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.  


Ponmudi: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: தமிழ்நாடு ஆளுநர் ரவி சுளீர்!