விழுப்புரம் : பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பனை கட்டுவோம் கட்டுவோம் என்பார்கள் நாங்கள் அதனை தடுப்போம் என்றும் பாமகவினர் வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை அவர்களுக்கு அது தான் தெரியும் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

பாமகவினர் வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகன் அமைச்சர்கள் பொன்முடி , சிவி கனேசன், சேகர் பாபு ஆகியோர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும், ஸ்டாலின் ஆட்சி நல்ல எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் திமுக  அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணியாற்றுகிறார்கள்.

 

இவர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றிவர்கள் என்பதால் எளிதில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று பெறுவார் என தெரிவித்தார். பாமகவினர் வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை, அவர்களுக்கு அது தான் தெரியும். மேலும் பாலாற்றின் குறுக்கே அனைக்கட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தடுப்பணை கட்டுவோம் கட்டுவோம் என்பார்கள் நாங்கள் அதனை தடுப்போம் என்று கூறினார். 


விக்கிரவாண்டி தொகுதி:


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியிட விரும்புவோர் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரையில், வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


அதன்படி, மொத்தம் 56 வேட்பாளர்கள் சார்பில்  64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது நேற்று முன்தினம் நடந்த பரிசீலனையின் முடிவில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாரேனும் திரும்பப் பெற விரும்பினால் இன்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. 


இந்நிலையில், வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வேட்பாளர்கள்:


இதில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா, பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் அபிநயா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதால், இது  திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான மும்முனைப்போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.