எடப்பாடி பழனிச்சாமி என் மீது கொலை வெறியில் உள்ளார் என்றும் விஜயின் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி சம்பாதிக்க திட்டமிட்டார் என்று ஈரோடு தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டை பரப்பரப்பு விமர்சினத்தை எடுத்து வைத்தார். 

Continues below advertisement

தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர்  செங்கோட்டையன் ஈரோட்டில் பரப்புரை மேற்க்கொண்டார். அப்போது பேசிய அவர்எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யச் சொல்லும் அளவுக்கு அவர் இறங்கிச் சென்றிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது. ஏற்கெனவே 10 முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி என்பார்கள் அவரை எடப்பாடி பழனிசாமி நாட்டை ஒரு கம்பெனி போல நடத்தப் பார்க்கிறார்.

எனக்கா துரோகி பட்டம்?

அவரின் மகனும், மச்சானும் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள். இது மக்கள் நலனுக்கான இயக்கம் அல்ல, ஒரு குடும்ப கம்பெனி.பவானி ஆற்றின் அருகே ரூ.2,000 கோடியிலும், மேட்டூர் அருகே ரூ.3,000 கோடியிலும் ஃபேக்டரி கட்டி வருகிறார். இதனால் ஆற்றுத் தண்ணீர் மாசடைந்து விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்படப் போகிறார்கள். முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த எனக்கா துரோகி பட்டம்? அவருக்கு அரசியல் களம் தெரியவில்லை. மக்கள் சக்தி இன்று விசில் சின்னத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது." என்றார்.

Continues below advertisement

விஜயை வைத்து முதல்வர் பிளான்

நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரா சுமார் ரூ.5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுத்ததே நான்தான். எனக்குட பின் கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, உழைத்தவர்களையே இப்போது நீக்கி வருகிறார்.

என்னை பார்த்து துரோகி என்று..நான் முதல்வராக ஆகி உங்களை கட்சியில் விட்டு தூக்கியிருந்தால் நான் துரோகி, ஆனால் நான் பொதுச்செயலாளராக உங்களை விட்டு கொடுத்ததால் தான் எனக்கு பெயர் துரோகி. நான் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்னதால் தான் எனக்கு அவர் வைத்த பெயர் துரோகி. நான் டெப்பாசிட் வாங்க மாட்டேன் என சொல்கிறார்.