இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டப் வாக்குப் பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. 


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகிக்கிறார்.


திமுக - 21967
அதிமுக -12222
பாஜக -6459
நாம் தமிழர் -3110


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 31 பேர் களத்தில் இருக்கிறார்கள். 1722 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. அதே போன்று ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சாலையில் உள்ள சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு 84 மேசைகள் அமைக்கப்பட்டு 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. 


இதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ண தனியாக ஆறு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் வாக்கு என்னும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் என அனைவரும் வாக்கு என்னும் மையத்திற்குள் செல்போன், மடிக்கணினி, ஐபேட் போன்ற மின்சாதன பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 


வாக்கு எண்ணும் மையம்


வாக்கு எண்ணும் மையத்திற்குள் அரசு அலுவலர்கள் வேட்பாளர்கள் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனை முழுமையாக கடைப்பிடித்து அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்கு என்னும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அதிலும் மின்னணு வாக்குகளை எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகிறது. 


பாதுகாப்பு ஏற்பாடுகள்


வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அரசு பொறியியல் கல்லூரி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை வாக்கு என்னும் மையத்தில் அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் என அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.