திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகள், செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் பரப்புரை சூடுபிடித்துள்ளது.  வந்தவாசியை அடுத்த பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் மற்றும் 12 வாக்கு சாவுடிகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த பேரூராட்சியில் உள்ள இரண்டாவது வார்டில் திமுக கூட்டணி, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மும்முனைப் போட்டியில் களம் காண்கின்றனர்.


Local body election | காஞ்சியில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக வேட்பாளர் - காரணத்தை விளக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்



இந்நிலையில் பெரணமல்லூர் எம்ஜிஆர் சிலை எதிரே அதிமுக அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் தூசி மோகன் திறந்து வைத்தார். அதன் பின்னர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பஜார் வீதி அஸ்தினாபுரம் 6ஆவது வார்டு பகுதியில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், நகரச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது பஜார் வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாவட்ட செயலாளர் மோகன் டீ போட்டுக் கொடுத்து ஓட்டு சேகரித்தார். இதற்கு ஒருபடி மேலே சென்ற முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் அங்குள்ள முதியவர் காலைப்பிடித்து இந்த முறை இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என பவ்வியமாக ஓட்டு கேட்டார்.


’மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக’ - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


 




இதைப் பார்த்த அங்கிருந்த முந்தியவர்கள் எம்ப எங்கள்காலில் விழுகிறாய் நாங்கள் ஓட்டுப் போடுகிறோம் காலில் விழவேண்டாம் எழுந்திரு என்று கூறினார். கு முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் எங்கள் பையன் மாதிரி வேட்பாளர் உங்கள் மகள் மாதிரி நாங்கள் உங்கள் காலில் விழக்கூடாதா என்று கேட்டுள்ளார். மேலும் பெரியவர்களின் ஆசிர்வாதம் கண்டிப்பாக எங்களுக்கு இருக்க வேண்டும். பெரியவர்கள் காலில் சிறியவர்கள் விழுந்து வணங்குவது தவறு இல்லை. வயதான உங்களுக்கு முதியோர் உதவித்தொகைகள் உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளும் வீடுதேடி கொண்டு வந்து தருவார்கள் என்றார்.


Local Body Election | எங்களுக்கு முருகனும் அல்லாவும் இயேசுவும் வேண்டும்; மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் நாங்கள் இல்லை - அண்ணாமலை