2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யார் ஜெயிக்கப்போவது யார் என்பது ஜோதிட ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85.10% வாக்குகள் பதிவான நிலையில் அவை அனைத்து இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும் அவை மிகுந்த நெருக்கமாக அமைந்திருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது. திமுக கூட்டணி 135-145 இடங்கள் வரை பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியாக அமைந்துள்ளது. அதேசமயம் நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைப் பிரித்து களத்தில் தங்கள் செல்வாக்கை காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இந்த நிலையில் கள நிலவரம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஆன்மிக விஷயங்களிலும் கவனம் செலுத்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜோதிட ரீதியான கணிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி பார்த்தால், “தற்போதைய கிரக அமைப்புகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகச் சில ஜோதிடர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஏப்ரல் 22, 2026 முதல் திமுகவின் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி தொடங்குவதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதக சில ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், ஏழரைச் சனியின் தாக்கம் காரணமாகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகே வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யின் ஜாதகத்தில் நீச்சபங்க ராஜயோகம்  உச்சத்தில் இருப்பதால், அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும், அரியனை ஏற வாய்ப்புள்ளதகவும் சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.இருப்பினும், மற்றுனொரு கணிப்பு அவர் 2026ஐ விட 2031-ல் முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது.

அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்று சில ஜோதிடர்கள் அடித்துக்  கூறுகின்றனர்.அவரது ஜாதகத்தில் பத்தாம் அதிபதி சனி வலுவாக இருப்பதால் இந்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கப்போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.