தி நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் சிவகுமார் வாக்களித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். "டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும். தனது குடும்பத்தோடு கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காமல் கடைக்கோடி மனிதனின் வாழ்க்கையில் ஒளியேற்ற  வேண்டும் . இதுதான் என்னுடைய வேண்டுகோள். இலவச பொருட்களை கொடுப்பது சரியானது. மதுவிற்கு எதிரான எனது நிலைப்பாடு கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்கிறது. குடிமக்களை குடிகார மக்களாக்குகிறார்கள் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் குடியால் நாசமா போயிட்டு இருக்காங்க. யாரு ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்னுடைய வேண்டுகோள். செய்வார்களா என்று தெரியாது ஆனால் செய்தால் சந்தோஷம் தான்" என்று சிவகுமார் கூறினார்