தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 130 இடங்களின் முன்னிலையில் உள்ளது. அடுத்தபடியாக அதிமுக 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 1639 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். 




234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி, 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள், 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள் என இருபாலருக்கும் 50-50 வாய்ப்பு போன்ற சில கவனிக்கத்தக்க விஷயங்களை செய்யும் கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. 2016-இல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1, ஆனால் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் களம்கண்ட நாம்தமிழர் 3.87 வாக்கு சதவிகிதத்தை பெற்று கவனிக்க வைத்தது. வளர்ந்து வரும் வாக்குசதவீதத்தை கணக்கில் கொண்டு அதே நம்பிக்கையுடன் 2021-இலும் 234 தொகுதிகளிலும் தனித்துக்களம் இறங்கியது நாம் தமிழர்.