கரூர் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேல் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.


 


 




 


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கரூர் லோக்சபா தொகுதி, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் அடங்கியுள்ளது. மேலும் கரூரில், கிருஷ்ணராயபுரம் (தனி) அரவக்குறிச்சி, திருச்சியில் மணப்பாறை, திண்டுக்கல்லில் வேடசந்தூர், புதுக்கோட்டையில் விராலிமலை ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. கரூர் நாடாளுமன்ற தொகுதியில், ஆறு லட்சத்து, 93 ஆயிரத்து, 730 ஆண்கள், எழு லட்சத்து, 35 ஆயிரத்து, 970 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 90 பேர் உள்பட, 14 லட்சத்து, 29 ஆயிரத்து, 790 பேர் வாக்களிக்க உள்ளனர். அதில், ஆண்களை விட, பெண் வாக்காளர்கள், 42 ஆயிரத்து 240 பேர் அதிகம் உள்ளனர்.


 


 




 


கரூர் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 1,670 வாக்குச்சாவடிகளில்  9,073 அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் இரவுக்குள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்றுவிட்டனர். கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), வேடசந்துார், மணப்பாறை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளுக்கு மொத்தம் 8000 மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் 2000 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2167 வாக்காளர் ஓட்டுப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் உள்ளிட்ட சுமார் 96 மேற்பட்ட பொருட்களும் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு GPS கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 


 




 


காலை 6.00 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7.00 மணி முதல் தொடங்கி மாலை 6.00 மணி வரை  ஓட்டுப்பதிவு  நடக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினர்.  கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.