குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வான நிலையில், நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.


பதவிக்காலம் முடிவு


ஏற்கனவே குடியரசு துணைத் தலைவராக பதிவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.



வேட்பாளர்கள்


இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் முன்பு மேற்குவங்க மாநில ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்ய நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த 790 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


வாக்காளர்கள்


மாநிலங்கள் அவையில் நியமன எம்.பி.க்களாக உள்ள 12 பேர் உட்பட 245 பேரும், மக்களவையில் நியமன உறுப்பினர்களாக உள்ள 2 பேர் உட்பட 545 பேரும் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். குடியரசு தேர்தலை போல எம்.எல்.ஏ.க்களுக்கு இதில் வாக்கு கிடையாது. வாக்கு மதிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும், எந்தக் கட்சியின் சின்னமும் இருக்காது.



இன்றே முடிவு தெரியும்


இன்று இந்த வாக்குப்பதிவு முடிந்த உடன் உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற மொத்தமுள்ள 790 வாக்குகளில் பாதியான 395 வாக்குகளுக்கு மேல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


யாருக்கு வெற்றிவாய்ப்பு?


இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. பாஜக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் வாக்களித்தாலே அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.