தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

என் வாக்கு, என் உரிமை என்ற விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கு? எப்போது?

சென்னையில் உள்ள வேளச்சேரி, ஃபீனிக்ஸ் மாலில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

Continues below advertisement

பரிசுவிவரம்

இந்த போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு அருமையான ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

  • முதல் பரிசு: ரூ. 15,000
  • இரண்டாம் பரிசு: ரூ. 10,000
  • மூன்றாம் பரிசு: ரூ. 5,000

விதிமுறைகள்மற்றும்பதிவுசெய்யும்முறை:

  • ஒரு குழுவில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
  • ஒரு கல்லூரியில் இருந்து அதிகபட்சமாக இரண்டு குழுக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
  • கேள்விகள் அனைத்தும் முற்றிலும் தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறைகள் (Elections & Electoral Process) சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். பொது அறிவு கேள்விகள் கிடையாது.
  • பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9840927442 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவர்களிடம் தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சிறப்பான முன்னெடுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பரிசுகளை வெல்வதோடு, தங்களின் ஜனநாயக உரிமையையும் கடமையையும் முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.