தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தங்களது வேட்பாளர்களை இன்று அறிவித்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக தாங்கள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

Continues below advertisement

தேமுதிக வேட்பாளர்கள் யார்? யார்?

பல்லாவரம் - அனகை டி.முருகேசன்

விருதுநகர் - விஜயபிரபாகர்

Continues below advertisement

திருத்தணி - டி. கிருஷ்ணமூர்த்தி

குடியாத்தம் - கேபி பிரதாப்

தருமபுரி - இளங்கோவன்

சேலம் மேற்கு - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன்

மயிலம் - வெங்கடேசன்

போளூர் - டி.பி.சரவணன்

விருத்தாச்சலம் - பிரேமலதா 

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக, கடைசி நேரத்தில் தேர்தலில் கூட்டணியில் இடம்பிடித்து 10 தொகுதிகளை கைப்பற்றியது.

திமுக கூட்டணியில் தேமுதிக:

தேமுதிக கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக எந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. இதனால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக களமிறங்குகிறது. 

விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இதனால், அவரது மறைவிற்கான அனுதாப வாக்குகளும் தேமுதிக-விற்கு கிடைக்கும். தேமுதிக-வைப் பொறுத்தமட்டில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே திமுக கூட்டணியில் இணைந்தனர்.

10 தொகுதிகள்:

அவர்களது சமயோஜிதத்தால் அவர்களுக்கு 10 தொகுதிகள் கிடைத்தது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்து எல்.கே.சுதீ்ஷ் மாநிலங்களவை உறுப்பினரானார். அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த தேர்தலில் வெற்றி பெறாத விரக்தியில் இருந்த தேமுதிக-வினர் திமுக கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அவர்களுக்குத் தேவையான தொகுதிகளையும் அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக தங்களது பரப்புரையை நாளை முதல் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.  விஜயபிரபாகர் கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அதே விருதுநகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் முதன்முறையாக இதே தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.