விழுப்புரம்: விழுப்புரத்தில் தந்தை நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வினை தந்தை உயிரிழந்த சோகத்தில் தேர்வினை எழுதினர்.
 
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்களிலும் என 105 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில்10,665மாணவர்களும்11171 மாணவிகளும் என 21836 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க , பறக்கும் படைகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 3500 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
 
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேர்வு எழுதும் ரித்திகாவின் தந்தை பிரபாகரன் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதினார். இந்நிலையில் நூர்ஜகான் என்கிற மாணவியின் தந்தை ஜான்பாட்ஷாவும், முகையூர் பகுதியைச் சேர்ந்த மாணவி மகிமை அரசின் தாய் அமலமேரி நேற்று உயிரிழந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 05.03.2025 முதல் 27.03.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 22435 மாணவ மாணவிகள் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 24126 மாணவ/ மாணவிகள் 126 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

03.03.2025 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு/முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்/துறை அலுவலர்கள்/பறக்கும்படை உறுப்பினர்கள்/ வழித்தட அலுவலர்கள் / அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மொத்தம் 3200 பணியாளர்கள் தேர்விற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டில் 579 மாணவ/மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். 20 இதில் பார்வைத்திறனற்ற மாணவ/ மணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

தேர்வு முறையாக நடைபெறுவதற்கு 147 நிலையான பறக்கும் படையினரும், திடீர் ஆய்வு செய்வதற்கு முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களின் தலைமையில் 10 பறக்கும். படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையாக நடைபெற முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் அலுவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ/ மாணவிகள் காப்பி அடிப்பதோ அதற்கு உதவியாக இருப்பதோ கூடாது. காப்பி அடிக்கும் மாணவ/மாணவிகளின் மீது அரசுத்தேர்வுகள் இயக்குநரக விமுறைகளின் படி நடவடிக்கை. எடுக்கப்படும்.

தேர்வு மையங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் விவரம் :

அனைத்து தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையற்ற மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த அவசர உதவிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவி ரித்திகாவின் தந்தை பிரபாகரன் இன்று காலை மாரைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மாணவி தேர்வு எழுத வந்துள்ளார்.

இதேபோல் நூர்ஜகான் என்கிற மாணவியின் தந்தை ஜான்பாட்ஷா நேற்று உயிரிழந்த நிலையில் அந்த மாணவியும் தற்போது தேர்வு எழுதி வருகிறார்.

முகையூர் பகுதியைச் சேர்ந்த மாணவி மகிமை அரசின் தாய் அமலமேரி நேற்று உயிரிழந்த நிலையில் தற்போது அந்த மனைவியும் தேர்வு எழுதி வருகிறார்.